Karnan usa

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்...! 'ஒரு தேர்வை இன்னொரு தேதிக்கு தள்ளி வைப்பு...' - தேர்வுத்துறை தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால் பிளஸ்- டூ தேர்வு ரத்து செய்யப்படும் அல்லது ஆன்லைனில் நடத்தப்படும் என்று மாணவர்களிடயே எதிர்பார்ப்பு நிலவியது.

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்...! 'ஒரு தேர்வை இன்னொரு தேதிக்கு தள்ளி வைப்பு...' - தேர்வுத்துறை தகவல்...!

இந்த நிலையில் சற்று முன் இது குறித்த அறிவிப்பு ஒன்றை தமிழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

பிளஸ்-டூ தேர்வில் மே 3-ம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாடம் மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதிக்கு பதிலாக மே 31-ம் தேதி நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழிப்பாடம் தவிர இதர பாடத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து தேர்வுகளும் நடக்கும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே 2-ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவருவதால் இந்த ஒரு தேர்வை மட்டும் மாற்றி வைத்திருக்கலாம் என கருத்தப்படுகிறது.

மற்ற செய்திகள்