'ஊரடங்கில் தளர்வா இல்லை கட்டுப்பாடா'?... 'மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை'... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

'ஊரடங்கில் தளர்வா இல்லை கட்டுப்பாடா'?... 'மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை'... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது. இதனால் பதவியேற்ற நேரத்திலிருந்து கடும் நெருக்கடிக்கு இடையே அரசு செயலாற்றியது.

அதேநேரத்தில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது.

Tamil Nadu extends lockdown and no fresh relaxations

தற்போது வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களைத் திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்