"பெண்களோட பாதுகாப்புக்கு நான் 'உறுதி'..." தமிழக முதல்வரின் 'மகளிர் தின' வாழ்த்து 'பதிவு'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மார்ச் எட்டாம் தேதியான இன்று, உலக மகளிர் தினம் என்பதால், உலகெங்கிலுமுள்ள மக்கள், பெண்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

"பெண்களோட பாதுகாப்புக்கு நான் 'உறுதி'..." தமிழக முதல்வரின் 'மகளிர் தின' வாழ்த்து 'பதிவு'!!

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெண் என்பவர், தாயாக, சகோதரியாக, தாரமாக, பல்வேறு சூழ்நிலைகளில் உடனிருந்து நம்மை வழிகாட்டும் உயிராகவும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மகளிர் தின வாழ்த்து கூறி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tamil Nadu Chief Minister's tweet on the eve of Women's Day

 

மகளிர் தினம் குறித்த முதல்வர் பழனிசாமியின் பதிவில், 'தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu Chief Minister's tweet on the eve of Women's Day

 

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட, காவலன் செயலி உள்ளிட்ட பல திட்டங்களை,   அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்