'ஆறாவது மாடியிலிருந்து விழுந்த இனிஜினியர்...' 'சம்பவ இடத்திலேயே மரணம்...' சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

'ஆறாவது மாடியிலிருந்து விழுந்த இனிஜினியர்...' 'சம்பவ இடத்திலேயே மரணம்...' சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

சென்னை சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் திருப்பூரை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் பிரபு (வயது 24) பணிபுரிந்து வந்தார்.

என்ஜினீயரான அவர் நேற்று பணியில் இருக்கும்போது, திடீரென்று நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலைப்பகுதி சிதைந்ததால் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில்  துடிதுடித்து பலியானார்.

இது குறித்து கேளம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் விரைந்து வந்து பலியாகி கிடந்த அவரது உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரபு பணிபுரியும் கம்பெனியில் உள்ள பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SIPCOT