‘நாளை முதல் அனைவரும் பயணிக்க அனுமதி’!.. ஆனாலும் ‘அந்த’ கட்டுப்பாடு மட்டும் மறுபடியும் தொடரும்.. தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

‘நாளை முதல் அனைவரும் பயணிக்க அனுமதி’!.. ஆனாலும் ‘அந்த’ கட்டுப்பாடு மட்டும் மறுபடியும் தொடரும்.. தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

ஊரடங்கு காரணமாக சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை (25.06.2021) முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Suburban train service resumes in Chennai from tomorrow

மேலும், முன்பு இருந்ததைப் போலவே ஆண்கள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத நேரத்தில் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, புறநகர் ரயிலில் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் கடைசி ரயில் இயக்கப்படும் வரையிலும் ஆண் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suburban train service resumes in Chennai from tomorrow

அதேவேளையில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் யாரும் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்