'ஏங்க நம்ம குழந்தைங்களுக்கு பேச்சு மூச்சு இல்ல...' 'நான் தான் கழுத்தை நெரிச்சு கொன்னேன்...' என்ன காரணம்...? - பதபதைக்க வைக்கும் கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகாசியில் தந்தையே தனது இரண்டு பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'ஏங்க நம்ம குழந்தைங்களுக்கு பேச்சு மூச்சு இல்ல...' 'நான் தான் கழுத்தை நெரிச்சு கொன்னேன்...' என்ன காரணம்...? - பதபதைக்க வைக்கும் கொடூரம்...!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் இருக்கும் செங்கமலப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் 27 வயதான காளிதாஸ், அவருக்கு தங்கபுஸ்பம் (26) என்ற மனைவியும், 5 வயதில் மாரிஸ்வரன் என்ற மகனும், 4 வயதில் காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

காளிதாஸ் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றுவதையே வழக்கமாக வைத்திருப்பவர். அவரது மனைவி தங்கபுஸ்பம் அப்பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்றும் எப்போதும் போல் பணிக்கு சென்று மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார் தங்கபுஷ்பம். அந்நேரத்தில் குழந்தைகள் இருவரும் படுத்துக் கொண்டிருந்துள்ளனர். விளையாடிய களைப்பில் தான் தூங்குகின்றனர் என நினைத்த தங்கபுஷ்பம் அதன் பின், இரவு உணவு சாப்பிட குழந்தைகளை எழுப்பியுள்ளார்.

ஆனால் குழந்தைகள் இருவரும் அசைவற்று கிடந்துள்ளார். பதறி போன தங்கபுஷ்பம், என்ன ஆச்சு என கணவர் காளிராஜ்ஜிடம் விசாரித்துள்ளார். நான் தான் குழந்தைகளை கழுத்து நெறித்து கொன்றேன் எனக்கூறியுள்ளார். இதனை கேட்ட தங்கபுஷ்பம் கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து தரையில் கிடந்த குழந்தைகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிவகாசி கிழக்கு போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தைகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தன் குழந்தைகளையே கழுத்தை நெரித்து  கொன்ற தந்தை காளிராஜ்ஜையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் குழந்தைகளைக் கொலை செய்ய வேண்டிய காரணம் என்னவென்பது குறித்து சிவகாசி போலீசார் காளிதாசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்