'ஒரு பொண்ணு வேணும்னு நாங்க தான் சார் கேட்டோம்...' 'இனிமே இவ எங்களோட அடிமை...' தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காருக்குள் இளைஞர்களோடு இருந்த தங்கையை பற்றி விசாரிக்க சென்றவரை அடித்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர்களை போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்த போது மேலும் பல அதிர்ச்சி அடைய வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ஒரு பொண்ணு வேணும்னு நாங்க தான் சார் கேட்டோம்...' 'இனிமே இவ எங்களோட அடிமை...' தோண்ட தோண்ட வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையம் பகுதியில் காருக்குள் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுமி அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். சிறுமியின் அண்ணன் தற்செயலாக அவ்வழியே செல்லும் போது காருக்குள் இருந்த தன் தங்கையை பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே விசாரிக்க சென்ற நபர் தங்கையிடம் யார் இவர்கள் என்று கேட்க, உடன் இருந்த இரண்டு இளைஞர்கள் இவள் இனிமே எங்கள் அடிமை என்று பதில் சொல்லியுள்ளனர். கோபமடைந்த சிறுமியின் அண்ணனுக்கு அங்கிருந்த இளைஞர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் சிறுமியின் அண்ணனை கீழே தள்ளிவிட்டு, சிறுமியை காரில் ஏற்றி புறப்பட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த சிறுமியின் அண்ணன் போலீசாருக்கு தகவல் கொடுத்து, பதற்றத்துடன் தங்கை சென்ற காரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார் செல்லும் பகுதியின் காவலர்களுக்கு தகவல் அளித்து இளைஞர்கள் சென்ற காரை மடக்கி பிடித்துள்ளனர்.

தப்பி ஓட முயற்சித்த இளைஞர்களில் ஒருவனை போலீசாரை மடக்கி பிடித்தனர். காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் சில திடுக்கிடும் சம்பவங்களை அந்த இளைஞர் அவர்களிடம் கூறியுள்ளார்.  இந்த சம்பவம் தற்போது ஊடகங்கள் மூலம் பரவி சென்னைப் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களுக்கு தெரிய வர, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின் பெயரில் இந்த வழக்கு குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியிடமும், சிறுமியை கடத்தியவர்களில் ஒருவரான பிரகாஷிடம் விசாரணை நடத்தினர்.

பிரகாஷ் போலிசாரின் விசாரணையில் தங்களுடைய ஆசைக்காக ஒரு பெண் வேண்டும் என்று பல்லாவரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்மணியிடம் அவர்கள் கேட்டதாகவும், அதனால் பணம் வாங்கி கொண்டு இந்த சிறுமியை அப்பெண் தங்களிடம் ஒப்படைத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கடத்தப்பட்ட சிறுமிக்கும் அந்த பெண்மணிக்கு ஏற்கனவே தொடர்பு இருந்ததாகவும், அந்தப் பெண் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக கூறியுள்ளார். அதை தொடந்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண்ணையும் போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கடத்தல் வழக்கில் தொடர்புடைய பைசல் என்ற மற்றுமொரு இளைஞரை போலிசார் தேடி வருகின்றனர்.

KIDNAPED