'உன்ன என்ன பண்றேன் பாரு'... 'எனக்கும் என் குடும்பத்துக்கும் வரும் மிரட்டல்'... நடிகர் சித்தார்த் வெளியிட்ட அதிர்ச்சி ஆதாரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'உன்ன என்ன பண்றேன் பாரு'... 'எனக்கும் என் குடும்பத்துக்கும் வரும் மிரட்டல்'... நடிகர் சித்தார்த் வெளியிட்ட அதிர்ச்சி ஆதாரம்!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை படு தீவிரமாகப் பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா ருத்ரதாண்டம் ஆடி வருகிறது. இதனால் அங்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆக்சிஜன் இல்லை என்று பொய் கூறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையானது. முதல்வர் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக மருத்துவமனைகளை எச்சரிக்கிறார் எனப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

Siddharth receives death threats, BJP Tamil Nadu IT cell leaked

இதற்கிடையே அரசியல் குறித்தும், கொரோனா குறித்தும் நடிகர் சித்தார்த் தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அந்தவகையில் நடிகர் சித்தார்த், சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும் என்று கூறியிருந்தார்.

இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சித்தார்த்த சற்று முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய போன் நம்பர் எப்படியோ தமிழ்நாடு பாரதிய ஜனதா உறுப்பினர்களிடம் லீக் ஆகிவிட்டது. அதை வைத்து எனக்கும் எனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் மற்றும் பாலியல் தொடர்பான மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Siddharth receives death threats, BJP Tamil Nadu IT cell leaked

இதுவரை 500-க்கும் மேற்பட்ட முறை போன் கால்கள் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதை எல்லாம் நான் காவல்நிலையத்தில் சமர்ப்பிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அது தொடர்பான ஆதாரத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்