லேசான கொரோனா பாதிப்பு கூட 'மூளையை' பாதிக்கும்... இவங்களுக்கு தான் 'ரிஸ்க்' அதிகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

லேசான கொரோனா தொற்று கூட மூளை பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லேசான கொரோனா பாதிப்பு கூட 'மூளையை' பாதிக்கும்... இவங்களுக்கு தான் 'ரிஸ்க்' அதிகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நாள்தோறும் புதிய அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் லேசான தலைவலி கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று மூளை பாதிப்பை ஏற்படுத்தும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து விடுபட்டவர்களில் மட்டுமே இந்த மூளை பாதிப்பை அதிக அளவில் பார்க்க முடிவதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். சிலருக்கு கொரோனாவின் முதல் அறிகுறியாக இந்த மூளை பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

43 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேருக்கு மயக்கம் இருந்ததும், 8 பேருக்கு நரம்பு சேதம் இருந்ததும், மேலும் 8 பேருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடிய நரம்பு மண்டல பாதிப்பு இருந்தததாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டோரில் 5 சதவீதம் பேர் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைவதாகவும், ஆனால் சிலருக்கு இந்த மூளை பாதிப்பு நீண்டநாள் பிரச்சினையாக மாறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நரம்பியல் விளைவுகளின் ஆபத்து குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்