'கையில டீ கிளாசை வச்சிட்டு...' 'கடை முன்னாடி நின்னு எதுக்கோ பக்கு வைக்கிறாரே...' - ஓ... இதான் அப்போ ப்ளானா...?!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர் ஒருவர் கடைக்கு முன் இருந்த எல்.இ.டி. பல்பை திருடி சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

'கையில டீ கிளாசை வச்சிட்டு...' 'கடை முன்னாடி நின்னு எதுக்கோ பக்கு வைக்கிறாரே...' - ஓ... இதான் அப்போ ப்ளானா...?!

சேலம் மாவட்டம் வெள்ளாண்டி வலசு பகுதியில் மதியழகன் என்பவர் செல்போன் கடை நடத்திவருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் பூட்டிக்கிடந்த செல்போன் கடைக்கு வந்த மர்ம நபர், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் வேறொரு விஷயத்திற்காக காத்திருப்பது போல் வெகுநேரமாக பாவனை செய்து கொண்டிருந்தார்.

அதன்பின் பக்கத்தில் இருக்கும் பேக்கரிக்கு சென்று டீ வாங்கி வந்து குடித்துக்கொண்டே, தீடீரென கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி. பல்பை எடுத்து வேட்டிக்குள் மறைத்து வைத்து பைக்கில் தப்பியோடி விட்டார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்