‘மொத்த குடும்பமும் இதே வேலையா இருந்திருங்காங்க’.. ‘இளம்பெண்களை டார்கெட் பண்ணி..!’.. சேலத்தை அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் பெண்களை ஆபாசமாக படமெடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘மொத்த குடும்பமும் இதே வேலையா இருந்திருங்காங்க’.. ‘இளம்பெண்களை டார்கெட் பண்ணி..!’.. சேலத்தை அதிரவைத்த சம்பவம்..!

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வறுமையில் வாடும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்களை குறிவைத்து அவர்களிடம் பணம் சம்பாதிப்பதற்கான ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.

மேலும் அந்த இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும் முயற்சி செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் லோகநாதன், அவரது மனைவி உள்ளிட்ட மொத்த குடும்பமே இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பெண்களை வைத்து தொழிலதிபர்கள் சிலரை தங்களது வலையில் விழ வைத்து அவர்களையும் ஆபாசமாக படமெடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

தற்போது லோகநாதனின் தந்தை ரகுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகநாதனின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். இளம்பெண்களையும், தொழிலதிபர்களையும் ஆபாசமாக படம் எடுக்க பயன்படுத்திய செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை 6 இளம்பெண்கள் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கும்பலால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து பட்டியலை போலீசார் தயார் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்