லலிதா ஜீவல்லரி, பஞ்சாப் நேஷனலைத் தொடர்ந்து மீண்டும் அரங்கேறிய கொள்ளை சம்பவம்.. திருச்சியில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் மீண்டும் அரங்கேறியுள்ள வங்கிக் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லலிதா ஜீவல்லரி, பஞ்சாப் நேஷனலைத் தொடர்ந்து மீண்டும் அரங்கேறிய கொள்ளை சம்பவம்.. திருச்சியில் பரபரப்பு!

அண்மையில்தான் திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் புகுந்த 4 கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைச் சம்பவம் அடங்கி ஓய்வதற்குள் நிகழந்தது அடுத்த நகைக் கடைக் கொள்ளை சம்பவம்.

புகழ்பெற்ற லலிதா நிறுவன கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகன் & குழுவினர் இணைந்து கூட்டுக் கொள்ளையடித்து நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் ஒருவர் ஒருவராக சிசிடிவி மூலமும் விசாரணை மூலம் சிக்கிக் கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது.

இந்த நிலையில்தான் திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் தற்போது இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை போயிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ROBBERY, TRICHY