'திரைத்துறையில் சாதனை'... 'நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசின் உயரிய விருது'... மத்திய அரசு அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிக்குத் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

'திரைத்துறையில் சாதனை'... 'நடிகர் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசின் உயரிய விருது'... மத்திய அரசு அறிவிப்பு!

திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். அமிதாப்பச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோருக்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைத்துறையில் நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த்திற்குத் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்