சென்னையில் விட்டு விட்டு பெய்யும் ‘மழை’.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் விட்டு விட்டு பெய்யும் ‘மழை’.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Rain with thunder in coastal districts meteorological center

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 3ம் தேதி கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 4ம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Rain with thunder in coastal districts meteorological center

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச தூத்துக்குடியில் 1 செ.மீ மழை பெய்துள்ளது’ என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்