'நிவர் போனது!'.. புரவி வேகத்தில் வரும் புரெவி புயல்!.. திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது என தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நிவர் புயல் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியதை அடுத்து, மீண்டும் இந்த வாரம் உருவாகும் புதிய புயலான புரவி புயலால் தென் தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவு ஏற்படும் என கூறப்பட்டது.

'நிவர் போனது!'.. புரவி வேகத்தில் வரும் புரெவி புயல்!.. திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது என தகவல்!

பின்னர் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து, 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 7 கி.மீ. வேகத்தில் தென் கிழக்கு வங்க கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து,

டிசம்பர் 2ஆம் தேதி இலங்கை திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும். பின் தென் தமிழக கடற்கரையான குமரியில் கரையைக் கடந்து தமிழகம் வந்து பின்னர் கேரளா சென்று அரபிக் கடலுக்கு செல்லும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது கன்னியாகுமரியிலிருந்து 1150 கி.மீ தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதாகவும், டிசம்பர் 2ஆம் தேதி கரையைக் கடக்கும் புரெவி புயலால் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்