Darbar USA

‘3 வருஷமா மனைவியை காணோம்’.. விசாரணையில் கணவன் சொன்ன பகீர் தகவல்.. ஜேசிபி வைத்து தோண்டிய போலீசார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆள்வைத்து மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘3 வருஷமா மனைவியை காணோம்’.. விசாரணையில் கணவன் சொன்ன பகீர் தகவல்.. ஜேசிபி வைத்து தோண்டிய போலீசார்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சரண்யா. இருவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சரண்யா திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சரண்யாவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் வழக்கில் முன்னேற்றம் ஏற்படாததால் இதுகுறித்து மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க கடந்த 2018-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கணவர் ரமேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் நண்பர்களின் உதவியுடன் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதற்காக தனது நண்பர்கள் ரகு, பாட்ஷா உள்ளிட்ட நான்கு பேருக்கு 1 லட்சம் கொடுத்துள்ளார். அதன்படி அவர்கள் தனது மனைவியை கொலை செய்துவிட்டு சம்ராயன்பட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசியதாக ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற சிபிசிஐடி போலீசார், ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தோண்டி சரண்யாவின் எலும்புக்கூடை எடுத்தனர். இதனை அடுத்து பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் மனைவியை கொலை செய்த ரமேஷ், அவரது நண்பர்கள் ரமேஷ், பாட்ஷா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் 3 ஆண்டுகளாக காணவில்லை என நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CRIME, MURDER, KILLED, POLICE, HUSBAND, WIFE, PUDUKOTTAI