'எங்க யாருக்கும் சொல்லக்கூட இல்ல'... 'திருமணமான மூன்றே ஆண்டுகளில் நேர்ந்த துயரம்'... 'பெண் வீட்டார் கொடுத்த பகீர் புகார்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமயம் அருகே இளம்பெண் திருமணமான 3 ஆண்டுகளில் மர்மமான முறையில் உயிரியிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'எங்க யாருக்கும் சொல்லக்கூட இல்ல'... 'திருமணமான மூன்றே ஆண்டுகளில் நேர்ந்த துயரம்'... 'பெண் வீட்டார் கொடுத்த பகீர் புகார்!'...

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டில் திருமணமான 3 ஆண்டுகளில் உமா மகேஸ்வரி (23) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய கணவர் வீட்டார் பெண் வீட்டாருக்கும், போலீசாருக்கும் தெரிவிக்காமல் உடலை அவசர அவசரமாக எரித்துவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவரான சிவகுமாருடைய தகாத உறவைக் கண்டித்ததால் அவர்கள் அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளதை அடுத்து, அந்த பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் மற்றும் உறவினர்கள் 3 பேர் என மொத்தமாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்