நடுராத்திரியில் வரும் 'கல்' சைக்கோ..! 'நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை...' முதியவர்களையே குறி வைக்கும் கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் சாலையோரம் தூங்கும் அப்பாவி முதியோர்களை குறிவைத்து கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து பணத்தை எடுத்துச்செல்லும் சைக்கோ கொலையாளி குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுராத்திரியில் வரும் 'கல்' சைக்கோ..! 'நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை...' முதியவர்களையே குறி வைக்கும் கொடூரம்...!

சேலம் காசகாரனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் டயர் விற்பனை நிலையம் வாயில் முன்பு கடந்த 2 வருடங்களாக 60 வயது மதிக்க தக்க முதியவர் ஒருவர் இரவில் படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் டயர் விற்பனை நிலையம் வாயிலில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் தலையில் பெரிய கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு பாக்கெட்டில் இருந்த பணத்தினை எடுத்து சென்றுள்ளார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றிரவு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு முதியவரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை கொலையாளி எடுத்துச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சைக்கோ கொலையாளி குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து சேலம் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சைக்கோ கொலையாளி சாலையோரம் உறங்கும் முதியோர்களை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து பணத்தை எடுக்கும் சிசிடிவி காட்சிகளை தற்போது காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மாநகர் முழுவதும் உள்ள காவல்துறையினரிடம் சைக்கோ கொலையாளி இருக்கும் காட்சிகள் அனுப்பப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அடுத்த அசம்பாவிதம் நடப்பதற்குள் சைக்கோ ஆசாமியை பிடிப்பதில் காவல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரம் ஆதரவற்று தூங்கிக் கொண்டிருப்பவர்களை கொலை செய்து அவரிடம் இருந்து பணத்தை பறித்து செல்லும் சைக்கோ கொலையாளியால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PHYSCO