'26-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு'... 'தமிழக அரசு அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 144 தடையுத்தரவை அடுத்து, தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

'26-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு'... 'தமிழக அரசு அறிவிப்பு'!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு மட்டும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வரும் 24-ம் தேதி மாலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை தலைமைச் செயலர் சண்முகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 11-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. 24 அன்று முடியும் 12-ம் வகுப்பு தேர்வு வழக்கம்போல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.