தி.நகரில் உள்ள ‘பிரபல’ ஜவுளிக்கடைக்கு சீல்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தி.நகரில் உள்ள ‘பிரபல’ ஜவுளிக்கடைக்கு சீல்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி, சானிட்டைசர் வழங்குவது உள்ளிட்ட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வணிக நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த உத்தரவை முறையாக பின்பற்றாமல், வாடிக்கையாளர்கள் சில கடைகளில் அதிகமாக கூடுவதாக புகார்கள் வந்தன.

இந்தநிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையான குமரன் சில்க்ஸ்-ல், கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது. கொரோனா தொற்று பரவும் இந்த சூழலில், மக்கள் அதிக அளவில் கூடியதை தடுக்காததால் அந்த கடைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்