வெற்றிகரமாக முடிந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.! இவ்ளோ பேர் உதவியிருக்காங்களா? நன்றி சொன்ன நடிகர் பொன்னம்பலம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழைய தமிழ் சினிமாக்களில் வில்லன் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் பொன்னம்பலம்.

வெற்றிகரமாக முடிந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.! இவ்ளோ பேர் உதவியிருக்காங்களா? நன்றி சொன்ன நடிகர் பொன்னம்பலம்.!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஒரு ஓவருக்கு 7 பந்தா?.. இந்தியா - பாகிஸ்தான் மகளிர் உலகக்கோப்பை போட்டியில நடந்த சர்ச்சை சம்பவம்..!

அனேகமான படங்களில் இவரை பொன்னம்பலம் என்று சொல்வதைவிட  ‘கபாலி’ என்று சொன்னால் தான் பலருக்கும் தெரிந்த ஒரு வில்லன் நடிகராக பரிச்சயமானவர். பொன்னம்பலம் இடையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

இந்த நிலையில் பொன்னம்பலத்திற்கு கிட்னி கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. முன்னதாக 2021 -ஆம் வருடம் பிஹைண்ட்வுட்ஸில் நடிகர் பொன்னம்பலம் அளித்த பேட்டியில், “பணம் இன்றி மருத்துவ செலவுகளுக்காக நான் போராடியது மிகவும் கொடுமையானது. 20-க்கும் மேற்பட்ட முறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது. ” என இதுகுறித்து பேசியிருந்த விஷயம் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் பிப்ரவரி 10, 2023 அன்று வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நடிகர் பொன்னம்பலம் தனக்கு உதவிய நெஞ்சங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் பொன்னம்பலத்தின் 2வது அக்கா மகனும் விளம்பர பட இயக்குநருமான ஜெகந்நாதன் (35) தன் மாமா பொன்னம்பலத்துக்காக தனது சிறுநீரகத்தை கொடுத்துள்ளார். அவருக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகர்கள் கமல்ஹாசன், சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ் ஆகிய நடிகர்கள் பொன்னம்பலத்துக்கு நிதி உதவி செய்தனர்.

கடந்த 2022 மே மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தது முதல் சிறுநீரக அறுவை சிகிச்சை வரையிலான மருத்துவ செலவுகளை சிரஞ்சீவி ஏற்றுக்கொண்டார். நடிகர் சரத்குமார், பொன்னம்பலத்தின் குடும்பத்தேவைகளையும் பூர்த்தி செய்துவருகிறார். இதேபோல் நடிகர் கமல்ஹாசன் பொன்னம்பலத்தின் குழந்தைகளின் படிப்பு செலவுகளை ஏற்றுக்கொண்டார். இவர்களுடன் இணைந்து உதவிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர் அர்ஜூன்,நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் பிரபுதேவா, நடிகர் விஜய் சேதுபதி, , நடிகர் பவன், மத்திய அமைச்சர் எல்.முருகன், நண்பரும் தொழிலதிபருமான பாலா,  வழக்கறிஞர் கோபால், செந்தில்குமார் மற்றும் மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு சிகிச்சை பார்த்த மருத்துவமனை, மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read | "கல்யாணத்துக்கு விமானத்துல தான் போறோம்".. மொத்த டிக்கெட்டையும் புக் செய்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..!

PONNAMBALAM, பொன்னம்பலம்

மற்ற செய்திகள்