"அடாது மழையிலும் அயராது உழைப்பவர்!".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்!.. #ViralVideo!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.

"அடாது மழையிலும் அயராது உழைப்பவர்!".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்!.. #ViralVideo!

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நீடிப்பதன் காரணமாக, மழை பொழிவு பல இடங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் இருக்கும் என கூறப்பட்டது. 

இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் டிராபிக் காவலர் முத்துராஜா அடை மழையையும் பொருட்படுத்தாமல் நின்று சாலை போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் வீடியோவை பலரும் பாராட்டி "அடாது மழையிலும் அயராது உழைப்பவன்" என்கிற தலைப்புடன் ட்விட்டரில் பகிர்ந்துவருகின்றனர். 

 

மற்ற செய்திகள்