கிச்சன்ல இருந்த மிளகாய்ப்பொடிய எடுத்துட்டு வந்து.. எவ்ளோ சொல்லியும் கேட்க மாட்டீங்க இல்ல.. உச்சக்கட்ட கோவத்தில் மனைவி செய்த காரியம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருஷ்ணகிரி: கணவரின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கட்டையால் தாக்கி தீர்த்துக் கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிச்சன்ல இருந்த மிளகாய்ப்பொடிய எடுத்துட்டு வந்து.. எவ்ளோ சொல்லியும் கேட்க மாட்டீங்க இல்ல.. உச்சக்கட்ட கோவத்தில் மனைவி செய்த காரியம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் 42 வயதான நரேஷ்குமார். மேற்குவங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் இவருக்கு சசிகலா (38) என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் தம்பதியர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதோடு, மகனும், மகளும் சசிகலாவுடன் உள்ளனர்.

குடும்பம் நடத்த அழைப்பு:

தற்போது ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நரேஷ்குமார், நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் தனியாக வசித்து வரும் சசிகலாவின் வீட்டுக்கு சென்றார். அதோடு, குடும்பம் நடத்த வருமாறு சசிகலாவை அழைத்தார். ஆனால், சசிகலா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மிளகாய் பொடியை கணவரின் கண்களில் தூவிய மனைவி:

கடைசியில் வாய்த்தகராறு முற்றிய நிலையில் கடுப்பான சசிகலா மிளகாய் பொடியை எடுத்து நரேஷ்குமாரின் கண்களில் தூவி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு, ஆத்திரம் தீராத சசிகலா வீட்டில் இருந்த ஆயுதத்தைக் கொண்டு தீர்த்துக் கட்டியுள்ளார்.:

போலீசார் விசாரணை:

இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, சசிகலாவும், நரேஷ்குமார் தன்னை தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இந்த சம்பவம் குறித்து பாரூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அதோடு, மருத்துவமனையில் இருந்த சசிகலாவும் மாயமாகிவிட்டார். தலைமறைவாக உள்ள சசிகலாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POCHAMPALLY, WIFE, CHILLI POWDER, HUSBAND, மிளகாய் பொடி, மனைவி, போச்சம்பள்ளி

மற்ற செய்திகள்