"தமிழகம் முழுவதும்.. உணவகங்களில் இந்த கட்டுப்பாடு!".. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

"தமிழகம் முழுவதும்.. உணவகங்களில் இந்த கட்டுப்பாடு!".. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும், நாளை முதல் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை  ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த கொரோனா பரவும் காலத்தில் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்