பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு நிறுத்தம்? வெளியூர்களுக்கு செல்ல இயலுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஞாயிறுக்கிழமைகளில் கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகை அன்று சிறப்புப் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு நிறுத்தம்? வெளியூர்களுக்கு செல்ல இயலுமா?

பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக சென்னையில் இருந்து பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பண்டிகை காலத்தில் பயணம் செய்வார்கள். இதனால் அதிகப்படியான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

no special buses for pongal holiday due to covid lockdown

இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இந்த சூழலில் வருகிற ஜனவரி 9-ம் தேதி மற்றும் 16-ம் தேதிக்கான பேருந்துகள் முன்பதிவு நிறுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

no special buses for pongal holiday due to covid lockdown

போக்குவரத்து அதிகாரிகளுக்கு இந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பேருந்துகள் முன் பதிவை நிறுத்துவதற்கான உத்தரவுகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து இயங்காது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த உத்தரவு பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமையும் பொருந்துமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

no special buses for pongal holiday due to covid lockdown

மேலும், கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுள் ஒன்று, பொதுப் போக்குவரத்தில் 50% மட்டுமே மக்கள் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துத் துறையினர் 50% இடங்களுக்கு மட்டுமான பணிகளைச் செய்ய ஆயத்தமாகி உள்ளனர்.

சென்னை, சென்னை கோயம்பேடு, பொங்கல் பண்டிகை, சிறப்புப் பேருந்துகள், CHENNAI KOYAMBEDU, PONGAL BUSES, SUNDAY LOCKDOWN

மற்ற செய்திகள்