‘உயிர பணயம் வச்சு திருட வந்தா..’.. மளிகை கடை ஓனருக்கு லெட்டர் எழுதிய வினோத திருடன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருட வந்த கடையில் பணம் இல்லாததால் கடையின் உரிமையாளருக்கு திருடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘உயிர பணயம் வச்சு திருட வந்தா..’.. மளிகை கடை ஓனருக்கு லெட்டர் எழுதிய வினோத திருடன்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள மந்தாரக்குப்பத்தில் ஜெயராஜ் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வழக்கம்போல காலையில் கடையை திறந்தபோது பொருள்கள் அனைத்தும் சிதறி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தப்போது மேற்கூரையை உடைத்து மர்ம நபர் திருட வந்தது தெரிந்துள்ளது. ஆனால் திருட வந்த கடையின் கல்லாப்பெட்டியில் காசு இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன் கடையில் இருந்த பொருள்களை உடைத்து நாசம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், 'உயிர பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாத்தலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து இதுகுறித்து ஜெயராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEYVELI, THEFT, LETTER, CUDDALORE