பல வருஷ காதல்.. திருமணத்திற்கு முன் காதலி செய்த விஷயம்.. மனம் பொறுக்காமல் இளைஞர் எடுத்த முடிவு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணமான மூன்றே நாட்களில் இளைஞர் எடுத்த முடிவு, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.

பல வருஷ காதல்.. திருமணத்திற்கு முன் காதலி செய்த விஷயம்.. மனம் பொறுக்காமல் இளைஞர் எடுத்த முடிவு

Also Read | "இத விட என்ன பாக்கியம் கெடச்சுட போகுது.." மணப்பெண்ணுக்கு சகோதரன் கொடுத்த சர்ப்ரைஸ்.. மனம் உருகி போன நெட்டிசன்கள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை அடுத்த நடுவனந்தல் புதூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். கொத்தனார் வேலை செய்து வரும் இவர், தனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, காதல் விவகாரம், இரு வீட்டாருக்கும் தெரிய வரவே, அவர்கள் சம்மதம் தெரிவித்து திருமணம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

காதலி எடுத்த முடிவு

அதற்கான ஏற்பாடுகளும் நடத்தப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன் குமரேசன் மற்றும் அவரது காதலிக்கும் திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமண வேலைகள் அனைத்தும் மிகவும் மும்முரமாக இரு வீட்டார் தரப்பிலும் நடைபெற்று வந்த நிலையில், திடீரென குமரேசனின் காதலி எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி இருந்தது. குமரேசன் காதலித்த பெண் திருமணம் நடைபெற சுமார் 2 நாட்கள் இருக்கும் நிலையில், வேறு ஒரு வாலிபருடன் ஓடி போய், திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Newly wed youth decision after his marriage in tindivanam

வேறொரு பெண்ணுடன் திருமணம்

இதனால் குமரேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நிலைகுலைந்து போயினர். மேலும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் குமரேசனுக்கு வேறொரு உறவு பெண்ணுடன் திருமணத்தை நடத்தி வைக்கவும் குமரேசனின் குடும்பத்தினர்கள் முடிவு செய்துள்ளனர். குமரேசனுக்கும், அவரது காதலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே நாளில், காதலிக்கு பதிலாக தனது உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

காதலி போன பிறகு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், குமரேசன் மனம் மாறி மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்றே குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், திருமணம் முடிந்த மூன்றாம் நாள் குமரேசன் எடுத்த முடிவு பலரையும் மீண்டும் வேதனைக்குள்ளாக்கி உள்ளது. தனது விவசாய நிலத்துக்கு சென்று இருந்த குமரேசன், அங்கு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு உறவினர்கள் அரசு மருத்துவமனை சேர்த்திருந்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாலிபர் வெளியிட்ட வீடியோ

தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், குமரேசன் எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Newly wed youth decision after his marriage in tindivanam

தன்னை காதலித்த பெண் தன்னை விட்டு விட்டு, ஐந்து மாதங்கள் காதலித்த ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது நினைவுகளை என்னால் மறக்கவும் முடியவில்லை என்றும் அந்த வீடியோவில் குமரேசன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவை அனைத்து whatsapp குழுக்களில் பதிவிடுமாறும், அப்போதாவது இது போன்ற செயல்களை பெண்கள் செய்யாமல் இருப்பார்கள் என்றும் குமரேசன் அந்த வீடியோவில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Also Read | ஆசையா சாப்பிட போன ஆதரவற்ற சிறுவர்கள்.. வெளியே போங்கன்னு விரட்டிய ஹோட்டல் ஊழியர்.. நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!

TINDIVANAM, YOUTH, MARRIAGE

மற்ற செய்திகள்