777 Charlie Trailer

காதல் திருமணம் செய்துகொண்ட தங்கை.. "விருந்துக்கு வா" என அழைத்து சகோதரர் செஞ்ச காரியம்.. பரபரப்பான கும்பகோணம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கும்பகோணத்தில் புதிதாக திருமணமான தம்பதியை மணப்பெண்ணின் சகோதரர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்துகொண்ட தங்கை.. "விருந்துக்கு வா" என அழைத்து சகோதரர் செஞ்ச காரியம்.. பரபரப்பான கும்பகோணம்..!

Also Read | "மேட்ச் Tight ஆகும்போது அவர் பயந்துடறாரு".. ரிஷப் பண்டை விமர்சித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!

கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகே அமைந்துள்ள விளந்த கண்டம் அய்யாகாலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய தங்கை நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரிந்த திருவண்ணாமலையை சேர்ந்த மோகன் என்பவரும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமண ஏற்பாடு

இதற்கிடையே சக்திவேலின் உறவினரான ரஞ்சித் என்னும் இளைஞருக்கு அந்தப் பெண்ணை திருமணம் முடிக்க அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் சென்னையில் பணிபுரிந்து வந்த தனது தங்கையிடம் தகவலை கூறியுள்ளார் சக்திவேல். அப்போது தனது காதல் குறித்து பேசிய அந்த பெண் தனக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் பின்னர் நிதானம் அடைந்து இருவரும் வீட்டிற்கு விருந்து சாப்பிட வரும்படி அழைத்திருக்கிறார்.

தனது சகோதரரின் அழைப்பை ஏற்று தனது கணவருடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார் அந்த இளம்பெண். அப்போது சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் புதுமண தம்பதியை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் நிலை குலைந்த புதுமணத் தம்பதி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து போலீசில் அகப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் சக்திவேல் மற்றும் அவரது உறவினரான ரஞ்சித் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

விசாரணை

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் சோழபுரம் போலீசில் இது குறித்து தகவல் அளித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் புதுமணத் தம்பதியினரின் உடல்களை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே அப்பகுதி முழுவதும் கொலையாளிகளை கண்டுபிடிக்க காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் போலீசார் புதுமணத் தம்பதிகள் உடல்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இது குறித்து பேசிய தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியா "இரட்டை கொலை நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

Newly Married Couple attacked by Bride Relations

கும்பகோணத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தங்கையை வீட்டிற்கு விருந்து சாப்பிட வரும்படி அழைத்து சகோதரனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "கடவுள் இங்கே இருக்கார்".. விளம்பர பலகையில் எழுதப்பட்டிருந்த வாசகம்.. ஆனந்த் மஹிந்திரா போட்ட கமெண்ட்.. வைரல் ட்வீட்..!

COUPLE, NEWLY MARRIED COUPLE, ATTACK, BRIDE RELATIONS, காதல் திருமணம், கும்பகோணம்

மற்ற செய்திகள்