Darbar USA

கணவன்-மனைவி தகராறில் 'விஷம்' குடித்து... உயிருக்கு 'போராடிய' புதுமாப்பிள்ளை... சிகிச்சை பலனின்றி பலி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை செவ்வப்பாடிபுதூரை சேர்ந்த சுகவனேஸ்வரன்(25) என்பவருக்கும், அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த சத்தியா(22) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவன்-மனைவி தகராறில் 'விஷம்' குடித்து... உயிருக்கு 'போராடிய' புதுமாப்பிள்ளை... சிகிச்சை பலனின்றி பலி!

இந்தநிலையில் கடந்த 10-ம் தேதி சுகவனேஸ்வரன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுகவனேஸ்வரன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுகவனேஸ்வரன் இறந்தார்.

திருமணமான 8 மாதங்களில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.