‘நம்ம பக்கத்துல யாருக்கு கொரோனா இருக்கு??’... ‘நாமளே தெரிஞ்சுக்க உதவும் புதிய ஆப்!’... கலக்கும் சேலம் மாநகராட்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அருகில் இருக்கிறார்களா என அறிந்துகொள்வதற்காக புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘நம்ம பக்கத்துல யாருக்கு கொரோனா இருக்கு??’... ‘நாமளே தெரிஞ்சுக்க உதவும் புதிய ஆப்!’... கலக்கும் சேலம் மாநகராட்சி!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், தனி மனித இடைவெளி, முறையான மருத்துவ பரிசோதனை, வீட்டிலேயே இருத்தல், உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதால் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்று கூறி, தற்போதைய விழிப்புணர்வு முறைகளாக வலியுறுத்தப்படுகின்றன.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் 10மீ., 100 மீ., மற்றும் 1 கி.மீ இடைவெளியில் இருந்தால் தெரிந்துகொள்ள உதவும் வகையில் தனியார் கல்லூரியின் ஒத்துழைப்புடன் சேலம் மாநகராட்சி VEE-TRACE APP எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.