'ஐயோ...! என் பொண்ணு இப்படி பண்ணிட்டாளே...' '17 வயசு தான்மா ஆகுது, கொஞ்சம் பொறுத்துக்கோ...' கல்யாணம் பண்ணி வைக்காததால் மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தான் காதலித்தவரை உடனடியாக திருமணம் நடத்தி வைக்கவேண்டும் என அடம்பிடித்த 17 வயது பெண், பெற்றோர்கள் சம்மதிக்காததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஐயோ...! என் பொண்ணு இப்படி பண்ணிட்டாளே...' '17 வயசு தான்மா ஆகுது, கொஞ்சம் பொறுத்துக்கோ...' கல்யாணம் பண்ணி வைக்காததால் மகள் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சேலம்ரோடு பகுதியில் வாழ்ந்து வருபவர் ராம்ராஜ். இவருக்கு 17 வயதுடைய 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் உள்ளார். இந்நிலையில் தான் அந்த சிறுமி அவருடைய உறவினரும், மேஸ்திரியாக வேலை செய்யும் பிரபு என்பவரை காதலித்து வந்துள்ளார். மேலும் தன் காதலை பெற்றோரிடமும் கூறி உடனடியாக தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் அடம்பிடித்துள்ளார்.

ஆனால் சிறுமியின் பெற்றோர், இன்னும் கல்யாண வயதை நீ நெருங்கவில்லை, அதுமட்டுமில்லாமல் உனக்கு 18 வயது கூட நிரம்பவில்லை. ஒரு வருடம் போகட்டும் என கூறியுள்ளனர். ஆனால் பெற்றோரின் அறிவுரையை அலட்சியம் செய்த சிறுமி உடனடியாக கல்யாணம் செய்யுமாறு கூறியுள்ளார். இருப்பினும் பெற்றோர்கள் சம்மதம் கிடைத்தபாடில்லை.

இதனால் கோபமடைந்த அந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன் கையை அறுத்துக்கொண்டும், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தையும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தன் மகள் உயிருக்காக துடிதுடிப்பதை கண்டு பெற்றோர் கதறி துடித்துள்ளனர். ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனையில் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரப்பட்டு முன்யோசனை இல்லாமல் சிறுமி எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்