காதல் திருமணம் செய்த மூத்த மகள்.. மனவேதனையில் இருந்த தந்தை செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனைவி, 2 மகள்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த மூத்த மகள்.. மனவேதனையில் இருந்த தந்தை செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

இனி வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு சொன்னா ரெண்டு யோசிப்பாங்க போலயே.. RTI மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 55). இவரது மனைவி புவனேஸ்வரி (45). இவர்களுக்கு தனலெட்சுமி (வயது 22), வினோதினி (வயது 19), அட்சயா (வயது 17) ஆகிய மூன்று மகள்கள். இதில் வினோதினி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அட்சயா பிளஸ்-2 படித்து வந்தார். லெட்சுமணன் வீட்டின் வாசலிலேயே டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார்.

காதல் திருமணம்

இந்த நிலையில் இவரது மூத்த மகள் தனலெட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் லேப்பில் பணிபுரிந்து வந்தபோது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறியுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டு தனலெட்சுமி வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மன உளைச்சலில் தந்தை

இதனால் பெரும் மன உளைச்சலில் லெட்சுமணன் இருந்து வந்துள்ளார். மூத்த மகளின் நடவடிக்கையால் மற்ற 2 மகள்களின் வாழ்க்கை பாழாகி விட்டதே, குடும்ப கௌரவம் போய்விட்டதே என்று அருகில் உள்ளவரிடம் புலம்பி வந்தாக கூறப்படுகிறது. லெட்சுமணன் வழக்கமாக தினமும் காலை 4 மணிக்கு டீக்கடையை திறந்துவிடுவார்.

Nagapattinam man killed wife and two daughters

கொலை

இந்த சூழலில் நேற்று காலை 7 மணி வரை டீக்கடை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது புவனேஸ்வரி அவரது மகள்கள் வினோதினி, அட்சயா ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். இவர்களது அருகில் லெட்சுமணன் தூக்குப்போட்டு இறந்து கிடப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் போலீசார் புதுச்சேரி கிராமத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் லெட்சுமணன் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரை தூங்கிக் கொண்டிருந்தபோது கிரைண்டர் குழவி கல்லால் தலையிலும், நெஞ்சிலும் தாக்கி கொலை செய்து விட்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

தற்கொலை

மூத்த மகள் தனலெட்சுமி இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடியதால் மனவேதனையுடன் இருந்து வந்த லெட்சுமணன் விரக்தியிலும், ஆத்திரத்திலும் தனது மற்ற 2 மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பரபரப்பு

இதனை அடுத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் மனைவி, 2 மகள்களை அடித்து கொன்றுவிட்டு தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊழியர்களுக்கு எல்லாம் அடிக்கப்போகுது ‘செம’ ஜாக்பாட்.. 6 வருசத்துல இல்லாத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கலாம்? ஆய்வில் தகவல்..!

NAGAPATTINAM, MAN, WIFE, DAUGHTER, POLICE INVESTIGATE

மற்ற செய்திகள்