ET Others

டிப்டாப் டிரெஸ்.. நள்ளிரவு வீட்டு கேட்டை நைசா திறக்கும் மர்ம பெண்.. அதுக்கப்புறம் செய்யும் செயல்.. சிசிடிவி பார்த்து ‘ஷாக்’ ஆன மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நள்ளிரவு வீடுகளுக்கு செருப்புகளை வீசி எறியும் டிப்டாப் பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிப்டாப் டிரெஸ்.. நள்ளிரவு வீட்டு கேட்டை நைசா திறக்கும் மர்ம பெண்.. அதுக்கப்புறம் செய்யும் செயல்.. சிசிடிவி பார்த்து ‘ஷாக்’ ஆன மக்கள்..!

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மர்ம பெண் ஒருவர் தெருக்களில் நடந்து வருகிறார். அப்போது வீடுகளுக்கு வெளியே கழற்றிவிடப்பட்டிருக்கும்  செருப்புகளை அவர் கொண்டு வரும்  பையில் எடுத்துக் போட்டுக்கொள்கிறார். பின்னர் அருகில் உள்ள வீடுகளில் அந்த செருப்புகளை வீசி விட்டு செல்கிறார்.

செருப்புகள்

காலை எழுந்து பார்த்தபோது, தங்கள் வீட்டின் முன் கழற்றி விட்டிருந்த செருப்புகள் பக்கத்து வீட்டில் கிடைந்ததை பார்த்து மக்கள் குழம்பி போயுள்ளனர். ஒருவேளை நாய் கவ்விக் கொண்டு போட்டிருக்கலாம் என எண்ணியுள்ளனர். ஆனால் தினமும் இதேபோல் நடந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

மர்ம பெண்

நள்ளிரவு வேளையில், டிப்டாப்பாக ஆடை அணிந்து வரும் மர்ம பெண், தெருக்களில் மெதுவாக நடந்து வந்துள்ளார். அப்போது வீடுகளின் கேட்டை நைசாக திறந்து உள்ள கிடக்கும் செருப்புகளை, தான் கொண்டு வந்த பையில் அள்ளுகிறார். பின்னர் எதிர்புறத்திலும், அருகாமையிலும் இருக்கக்கூடிய வீடுகளின் காம்பவுண்டுக்குள் ஒன்றொன்றாக வீசிக் கொண்டே சர்வ சாதாரணமாக செல்கிறார்.

Mysterious woman throwing sandals into the house at midnight

பீதி

இந்த காட்சியைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏன் அப்பெண் இப்படி செய்கிறார்? ஒருவேளை மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்குமோ அல்லது ஏதும் மாந்திரீக வேலையாக இருக்குமோ என்று அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். அதனால் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

MYSTERIOUS, WOMAN, SANDALS, HOUSE, MIDNIGHT, RAMANATHAPURAM

மற்ற செய்திகள்