'சென்னையை சிவப்பு மண்டலமாக்கிய கொரோனா...' 'இந்த 5 மண்டலங்களில் 100 பேருக்கு மேல் பாதிப்பு...' 'கட்டுப்பாட்டை அதிகப்படுத்த முடிவு...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால், ஐந்து மண்டலங்களில் 100 பேருக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர்.

'சென்னையை சிவப்பு மண்டலமாக்கிய கொரோனா...' 'இந்த 5 மண்டலங்களில் 100 பேருக்கு மேல் பாதிப்பு...' 'கட்டுப்பாட்டை அதிகப்படுத்த முடிவு...'

சென்னையில் ராயபுரம், திரு,.வி,க.நகர், தேனாம்பேட்டையைத் தொடர்ந்து, தற்போது தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இந்த 5 மண்டலங்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரத்தில் 216 பேரும்,  தேனாம்பேட்டையில் 132 பேரும், கோடம்பாக்கத்தில் 116 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 5 மண்டலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது.

இதற்கு அடுத்தாற்போல், அண்ணாநகரில் 91 பேரும் பாதித்து உள்ளனர்.

வளசரவாக்கத்தில் 60 பேரும், அம்பத்தூரில் 33 பேரும், அடையாறில் 21 பேரும்,  திருவொற்றியூரில் 19 பேரும்,  ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 4 பேரும்,  சோழிங்கநல்லூரில் 3 பேரும், மணலியில் 3 நபரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. சென்னையில் தண்டையாபேட்டை, திரு.வி.க.., நகர், வளசரவாக்கம் பகுதிகளில் தலா ஒருவர் என மூன்று பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 63.01% பேரும், பெண்கள் 36.99% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.