“கொரோனாவால் பாதிக்கப்பட்ட, உயர் கல்வி அமைச்சரின் தற்போதைய நிலை இதுதான்!”.. மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட, உயர் கல்வி அமைச்சரின் தற்போதைய நிலை இதுதான்!”.. மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!

அவ்வகையில், அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில், மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கோவிட்-19ல் இருந்து நன்றாக குணமடைந்து வருகிறார்” என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

மேலும், அவர் தனியறையில் இருந்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருந்ததாகவும், விரைவில் அவர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்ப்பதாகவும், மருத்துவமனை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மற்ற செய்திகள்