'தனது' குடிசைக்கு 'தானே' தீவைத்து 'எரித்துவிட்டு'... 'போலீஸில்' புகார் அளித்த 'இளைஞர்'!.. ‘இப்படியும் ஒரு காரணமா?’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டிவனம் அருகே தனது உறவினர் ஒருவரை நிலத்தகராறில் பழிவாங்க நினைத்த மணிகண்டன் என்பவர் தனது குடிசை வீட்டுக்கு தானே தீ வைத்து ஏமாற்றிய சம்பவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

'தனது' குடிசைக்கு 'தானே' தீவைத்து 'எரித்துவிட்டு'... 'போலீஸில்' புகார் அளித்த 'இளைஞர்'!.. ‘இப்படியும் ஒரு காரணமா?’

திண்டிவனம் பகுதியில் உள்ள நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 8 ஆம் தேதி அன்று இரவு தனது சித்தப்பா மகன் பாலகணேஷ் தங்களது குடிசை வீட்டில் தன்னை கட்டிப் போட்டுவிட்டு குடிசையை எரித்து சென்றதாக போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும் பாலகணேஷ், தன் வீட்டின் பீரோவில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றதாக அந்த புகாரில் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.‌ 

விசாரணையில் நிலத்தகராறில் பாலகணேஷூடன் ஏற்பட்ட முரண் காரணமாக அவரைப் பழி வாங்குவதற்கு மணிகண்டன் தன் வீட்டுக்கு தானே தீ வைத்ததும், 15 லட்சம் ரூபாய் பணத்தை பாலகணேஷ் திருடிச் சென்றதாக பொய் கூறியதும் அம்பலமாகியது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்