COBRA M Logo Top

காதலி அளித்த புகார்.. கைதாகி வெளியே வந்ததும் அவரையே கரம் பிடித்த இளைஞர்.. ஜோராக நடந்த திருமணம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டம், மேலூர் அருகே அமைந்துள்ள மணப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவரது பக்கத்து ஊரான கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா.

காதலி அளித்த புகார்.. கைதாகி வெளியே வந்ததும் அவரையே கரம் பிடித்த இளைஞர்.. ஜோராக நடந்த திருமணம்!!

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் காதலித்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், திருமணம் செய்யவும் அவர்கள் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில், அழகுராஜா சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதன் பின்னர், 2019 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு மீண்டும் வந்த அழகுராஜாவின் வீட்டிற்கு தனது உறவினர்கள் சிலருடன் ரம்யா சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி, அழகுராஜாவிடம் அவர் கேட்டுள்ள நிலையில், தகராறு ஏற்பட்டு ரம்யா தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அழகுராஜா மீது புகார் ஒன்றையும் ரம்யா கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பெயரில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அழகுராஜா, மீண்டும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அழகுராஜா மீது லுக் அவுட் நோட்டீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

man married his girlfriend who file case against him

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த அழகுராஜாவை போலீசார் பிடித்து கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மீண்டும் அழகுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார்.

man married his girlfriend who file case against him

மீண்டும் ஜாமீனில் இருந்து வெளியே வந்த அழகுராஜா, சிறையின் அருகே இருந்த கோவில் ஒன்றில் வைத்து, தனது காதலியும் தன் மீது வழக்கு தொடுத்தவருமான ரம்யாவை திருமணம் செய்து கொண்டார்.

MARRIAGE, LOVE

மற்ற செய்திகள்