#Video:‘பன்னீர் பட்டர் மசாலா வைக்கச் சொல்லி கேட்ட பக்கத்து வீட்டு பெண்!’.. 'சமையல் மாஸ்டரான' கணவர் மீது சந்தேகமா? - பதிலுக்கு கணவர் செய்த செயல்!.. உறவுக்கார பெண்ணால் உண்டான புதுக்குழப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் சென்னையில் வேலை பார்த்துவரும் சமையல் மாஸ்டருமான செல்வராஜ் Behindwoods-ன் நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியை அணுகியுள்ளார். அதன் நெறியாளர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனிடம் அவர், அவரது மனைவி, செல்வராஜின் உறவுக்கார பெண் என அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர். 

#Video:‘பன்னீர் பட்டர் மசாலா வைக்கச் சொல்லி கேட்ட பக்கத்து வீட்டு பெண்!’.. 'சமையல் மாஸ்டரான' கணவர் மீது சந்தேகமா? - பதிலுக்கு கணவர் செய்த செயல்!.. உறவுக்கார பெண்ணால் உண்டான புதுக்குழப்பம்!

செல்வராஜ் கூறும்போது, தன் அம்மாவுக்கும் தன் மனைவிக்கும் தகராறு இருந்ததாக குறிப்பிடுகிறார். இதனிடையே பக்கத்து வீட்டுப் பெண் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்று செல்வராஜிடம் கேட்க அவரும் அந்த பதார்த்தத்தை சொல்லித்தந்துள்ளார்.  ஆனால் பன்னீர் பட்டர் மசாலா சொல்லித்தர சொல்லி கேட்டு அந்த பெண்மணிக்கும் செல்வராஜ்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உண்மை என்றால் உண்மையைச் சொல்லி தனது தாலி மீது சத்தியம் செய்ய சொல்லி கேட்டு இருக்கிறார் செல்வராஜின் மனைவி.

                                                                                                                    செல்வராஜ்

அத்துடன் செல்வராஜின் தந்தையான தனது மாமனார் செக்ஸ் டார்ச்சர் செய்வதாகவும், மாமியார் மண்ணெண்ணை ஊற்றி எரிக்க பார்ப்பதாகவும், கணவர் செல்வராஜ் வரதட்சணை கொடுமை செய்வதாகவும் 100-க்கு போன் செய்து அடிக்கடி புகார் அளித்து வந்துள்ளார் செல்வராஜின் மனைவி.  இதனிடையே கணவனைப் பிரிந்து சென்னைக்கு வேலைக்கு வந்த செல்வராஜின் உறவுக்கார பெண்ணுடன் செல்வராஜூக்கு தொடர்பு இருப்பதாக மனைவி உட்பட, அப்பெண்ணின் உறவுக்காரர்கள் என அனைவரும் கூறியதால், உண்மையில் அப்பெண்ணுடன், தான் தொடர்பு வைத்திருப்பதாக செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

செல்வராஜ்க்கும் அவருடைய மனைவிக்கும் மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் இப்போதும் செல்வராஜ் தனக்கும் தனது உறவுக்கார பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறுகிறார். தன் கணவர் தனக்கு பணத்தளவிலும் மனதளவிலும் உறுதுணையாக இல்லாமல், கடந்த கடைசி தீபாவளிக்கு கூட இருவரும் ஒன்றாக சுற்றியதாக புகார் கூறுகிறார் செல்வராஜன் மனைவி.

                                                                                                          செல்வராஜின் மனைவி

குழந்தைகளை அவ்வப்போது மனைவியிடம் இருந்து பிரித்து தன்னுடன் அழைத்துச் செல்லும் செல்வராஜ், மனைவியை மட்டும் தன் அம்மாவிடம் விட்டுவிட்டு சென்றதாகவும், தனக்கு உடல் நிலை சரியில்லாத நேரம் பார்த்து அதை காரணமாகக் காட்டி, செல்வராஜுக்கு வேறோரு பெண்ணை திருமணம் செய்து வைக்க, முயற்சி செய்ததாகவும், தன்னை மிகவும் அடித்தும், தன் கேரக்டரை விமர்சித்தும் செல்வராஜூன் தாயார் கொடுமை செய்ததாகவும் குறிப்பிடும் செல்வராஜின் மனைவி, தனக்கு செல்வராஜ் இத்தனையும் செய்துவிட்டு தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

                                                                                                               உறவுக்கார பெண்

செல்வராஜோ, தனக்கும் அந்த உறவுக்கார பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக அனைவரும் கூறியதால் தான், தனக்கும் அப்பெண்ணுக்கும் தொடர்பு உண்டானதாகவும், மனைவி தன்னை மிகவும் சந்தேகப்படுவதால் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். செல்வராஜின் உறவுக்கார பெண்ணும், செல்வராஜின் தரப்பினரும் தன் தரப்பினரும் தங்களை சந்தேகப்பட்டதால், ஆரம்பத்தில் உதவிக்காக பழகிய செல்வராஜூடன் இப்போது உண்மையில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: 'ஓரமா போய் விளையாடுங்கப்பா!'.. போலி தடியடி நடத்திய போலீஸ்!.. சாதூரியத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ‘இரண்டு ஊர் சண்டை’!

அண்ணா நகரில் வேலை பார்க்கும் செல்வராஜின் உறவுக்கார பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த விசாரணை நேர்கொண்ட பார்வையின் அடுத்த பகுதியில் தொடரும்.

மற்ற செய்திகள்