'கனவுல வந்த பேய்.. துரத்த ஆரம்பிச்சிருச்சு'.. ஓடிச்சென்று இளைஞர் செய்த விபரீத காரியம்.. பதறவைத்த சம்பவ்ம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கனவில் பேய் துரத்துவது போல் வந்ததும், பதறி அடித்துக்கொண்டு ஓடிப்போய் கிணற்றில் விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.

'கனவுல வந்த பேய்.. துரத்த ஆரம்பிச்சிருச்சு'.. ஓடிச்சென்று இளைஞர் செய்த விபரீத காரியம்.. பதறவைத்த சம்பவ்ம்!

அயனிவிளை நாகதேவி கோவிலுக்கு அர்ச்சகர் ஒருவர் சென்றபோது, அங்கிருந்த கிணற்றுக்குள் இருந்து சத்தம் வருவதாக உணர்ந்து அதனை எட்டிப் பார்த்துள்ளார். அப்போதுதான் தெரிந்தது, குறுகலான விட்டம் கொண்ட அந்த கிணற்றுக்குள் நபர் ஒருவர் விழுந்தது மட்டுமல்லாமல், தன்னை காப்பாற்றுமாறு கேட்டு கத்திக் கொண்டிருந்துள்ளார்.

இதை கவனித்த அர்ச்சகர் பதறிப்போய் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கூறியதும், அவர்கள் உடனடியாக விரைந்து வந்து கிணற்றுக்குள் விழுந்த நபரை வலைக் கட்டி மேலே தூக்கி வீசினர். அதன் பின்னர் அவரை விசாரித்தபோது அவர் கூறியதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தகவல்.

ஆம், தனக்கு, பேய் துரத்துவதுபோல் கனவு உண்டானதால், தான் ஓடிப்போய் கிணற்றில் விழுந்ததாக அந்த இளைஞர் கூறியுள்ளார். அதே சமயம் கிணற்றுக்குள் புதையல் இருப்பதாகவும் பலதரப்பில் இருந்தும் வதந்திகள் பரவி வரும் நிலையில், இளைஞர் கூறுவதில் எந்த அளவில் உண்மை இருக்கிறது என்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

KANYAKUMARI