"அப்பாவையும் மனைவியையும் காணும்!".. இரவு முழுவதும் தேடிய நபர்.. சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி!.. அதற்கு முதல் நாளே ‘வீட்டில் இருப்பவர்களுக்கு’ மயக்க மருந்து கொடுத்த மனைவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் மகனின் மனைவியுடன் தந்தை ஒருவர் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

"அப்பாவையும் மனைவியையும் காணும்!".. இரவு முழுவதும் தேடிய நபர்.. சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி!.. அதற்கு முதல் நாளே ‘வீட்டில் இருப்பவர்களுக்கு’ மயக்க மருந்து கொடுத்த மனைவி!

ஹரியானாவின் கணவருடன் வசித்து வந்த Asama என்கிற பெண் அதிகாலை நேரத்தில் மாமனாருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் Asamaவுக்கு அப்துல் என்பவருடன் திருமணமாகியதில்,  இத்தம்பதியருக்கு மூன்று வயதில் ஒரு மகன் மற்றும் 10 வயதில் மகன் உள்ளனர்.

இந்த நிலையில் அப்துலின் பெற்றோர் இருக்கும் காலனியில் இந்த தம்பதி ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்தான் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அதிகாலை 4 மணி அளவில் மாமனாருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் Asama.

இது தெரியாமல் இருவரையும் இரவு முழுவதும் தேடியுள்ள அப்துல், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இதுபற்றி காவலர்கள் விசாரித்தபோது, அப்துலின் தந்தை சலீமுடன் asama வெளியில் புறப்பட்ட விஷயம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் வீட்டில் இருந்தவரை யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அப்துலின் தந்தை சலீமும் Asamaவும் சண்டை போட்டுக்கொண்டிருந்ததால், அவர்களுக்குள் எந்த உறவும் இல்லை என அப்துல் நம்பியிருந்துள்ளார்.

மற்ற செய்திகள்