Radhe Others USA
ET Others

மயங்கிதான் கெடக்கான்னு நினைச்சோம்.. ஆனா இப்படி ஆகும் நினைக்கல.. மதுபோதையில் நண்பனுக்கு நடந்த கொடூரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனைவியை தவறாக பேசியதால் நண்பனுக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயங்கிதான் கெடக்கான்னு நினைச்சோம்.. ஆனா இப்படி ஆகும் நினைக்கல.. மதுபோதையில் நண்பனுக்கு நடந்த கொடூரம்..!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கிழவனேரி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முனீஸ் என்ற அனுமான் (வயது 20). இவர் காரியாபட்டி அச்சம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில், கடந்த மார்ச் 4 -ம் தேதி காரியாபட்டி பள்ளி அருகில் உள்ள ஒரு வீட்டின் முன்பு முனீஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், முனீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து முனீஸ் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது அக்கா குட்டியம்மா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனிடையே முனீஸின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடலில் உள் காயங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது முனீஸின் கூட்டாளிகளான கோழிபாபு (வயது 40), அருண்பாண்டிகுமார் (வயது 27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில் சம்பவத்தனறு முனீஸ், கோழிபாபு, அருண்பாண்டிகுமார் ஆகிய மூவரும் விறகுவெட்டி விற்பனை செய்த பணத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது கோழிபாபுவின் மனைவியை முனீஸ் தவறாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோழிபாபுவும், அருண்பாண்டிக்குமாரும் மண்வெட்டியால் முனீஸை தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முனீஸின்  உடலில் இருந்த ரத்தத்தை கழுவி விட்டு, வீட்டிற்கு வெளியில் படுக்க வைத்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். முனீஸ் மயங்கி கிடந்ததாக நினைத்ததாகவும், அனால் அவர் இறந்துவிட்டார் என மறுநாள் தான் தெரிய வந்ததாகவும் போலீசாரிடம் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FRIEND, WIFE

மற்ற செய்திகள்