'கண்டிப்பா இது ஏதோ ஒரு ரகசிய குறியீடு தான்...' ' ஆனா சீக்ரட் கோட் எழுதியிருக்க வீடுகளுக்குள்ள ஒரு ஒற்றுமை மட்டும் இருக்கு...' - உச்சக்கட்ட அதிர்ச்சியில் பொதுமக்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டத்தில் வீடுகளின் சுவரில் பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பல வண்ணங்களில் வரையப்பட்டிருக்கும் ரகசிய குறியீடுகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

'கண்டிப்பா இது ஏதோ ஒரு ரகசிய குறியீடு தான்...' ' ஆனா சீக்ரட் கோட் எழுதியிருக்க வீடுகளுக்குள்ள ஒரு ஒற்றுமை மட்டும் இருக்கு...' - உச்சக்கட்ட அதிர்ச்சியில் பொதுமக்கள்...!

மதுரை மாவட்டம் டி.ஆர். ஓ. காலணியில் உள்ள வீடுகளில் பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பல வண்ணங்களிலும், பென்சிலாலும் ரகசிய குறியீடுகள் போன்று வரையப்பட்டுள்ளன. மேலும் இந்த குறியீடுகள் அரசு ஊழியர்களின் வீடுகளில் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சில எழுத்துக்கள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்று, குறியீடு வரையப்பட்டிருந்த வீடுகளில் இருசக்கர வாகனங்களும் அடிக்கடி திருட்டு போவதாக கூறப்படுகிறது. இரவில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள் தீட்டிய சதிச் செயலாக இருக்கக் கூடும் என அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மற்ற செய்திகள்