'இருந்தாலும் செம தில்லு தான்...' 'அதே சட்டை...' 'அதே பைக்...' 'அதே ஏரியா...' 'சிசிடிவில கெடச்ச க்ளூ...' - அதிரடி ஆக்சன்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேற்று முன்தினம் (03-02-2021) சென்னை மதுரவாயில் பகுதியில் சாலையோரமாக செற்றுக் கொண்டிருந்த இருவரிடம், மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து மொபைல் போன்களை பறித்துச் சென்றார். அடுத்தடுத்து நடந்த இச்சம்பவம் குறித்து மதுரவாயில் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது.

'இருந்தாலும் செம தில்லு தான்...' 'அதே சட்டை...' 'அதே பைக்...' 'அதே ஏரியா...' 'சிசிடிவில கெடச்ச க்ளூ...' - அதிரடி ஆக்சன்...!

உடனடியாக புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு மொபைல் பறிப்பில் ஈடுபட்டவரைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று (04.02.2021) மதுரவாயல் அஷ்டலட்சுமி நகர் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனம் ஒட்டிவந்தவரை சோதனை செய்தனர். அவர், செல்ஃபோன் பறிப்பின்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர் வைத்திருந்த பைக்கை ஓட்டிவந்ததும்,  அதே சட்டை அணிந்து வந்ததும் காவல்துறைக்கு சந்தேகத்தை அளித்தது.

எனவே, அவரை பிடித்துத் தீவிர விசாரனை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர், போரூரைச் சேர்ந்த மோகன் (வயது 32) என்பதும், மதுரவாயல் பகுதியில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 பேரிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது.

மேலும், வழக்கமாக ஒரு பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்கள் அதன்பிறகு அந்தப் பகுதியில் போலீஸ் கண்காணிப்புக்கு பயந்து மீண்டும் அங்கு செல்லமாட்டார்கள். ஆனால், இவரோ முதல் நாள் அணிந்திருந்த அந்த சட்டையுடன், அதே பைக்கில் மறுநாள் அதே இடத்திற்குச் சென்றபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்