'பேசிக்கொண்டு' இருக்கும்போதே கிணற்றில் குதித்த காதலி... காதலன் செய்த 'விபரீத' காரியம்... இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பேசிக்கொண்டு ஏற்பட்ட தகராறில் காதலி கிணற்றுக்குள் குதிக்க அவரை காப்பாற்ற காதலனும் கிணற்றுக்குள் குதித்தார்.

'பேசிக்கொண்டு' இருக்கும்போதே கிணற்றில் குதித்த காதலி... காதலன் செய்த 'விபரீத' காரியம்... இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதல் ஜோடி இருவரும் நேற்று அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட காதலி சட்டென கிணற்றுக்குள் குதித்து விட்டார்.

இதைப்பார்த்து அதிர்ந்து போன விக்னேஷ் காதலியை காப்பாற்ற அவரும் கிணற்றுக்குள் குதித்து இருக்கிறார். இருவரும் நீருக்குள் தத்தளிக்க அந்த வழியாக சென்ற ஒருவர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 20 அடி ஆழ கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்