'சென்னை'யின் மிகப்பெரிய 'ஹோல்சேல்' மார்க்கெட்... 12 நாட்கள் மூடப்படுகிறது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையின் மிகப்பெரிய மொத்த மார்க்கெட் 12 நாட்கள் மூடப்படுகிறது.

'சென்னை'யின் மிகப்பெரிய 'ஹோல்சேல்' மார்க்கெட்... 12 நாட்கள் மூடப்படுகிறது!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முதல் ஜூன் 30-ம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் நேற்று கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது.

இந்த நிலையில் கொத்தவால் சாவடி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் நாளை முதல் 30-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்றும், மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மற்ற செய்திகள்