திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்!.. சென்னை வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த விபரீத சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்ததில் 9 மாத கர்ப்பிணி உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

திடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்!.. சென்னை வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த விபரீத சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் சிந்து என்கிற ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் முதல் மாடியில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

பின்னர் விழா முடிந்ததும் சிந்துவை அவரது உறவினர்கள் அங்கிருந்த லிப்ட் மூலமாக, கிரவுண்ட் புளோருக்கு அழைத்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக லிஃப்ட்டின் தாங்கு கயிறு அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் சிந்து உட்பட அவரது உறவினர்கள் என 6 பேர் காயம் அடைந்தனர்.

மற்ற செய்திகள்