LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top

கல்யாண Invitation-ஆ? இல்ல Meme-ஆ? வடிவேலு, பார்த்திபன்னனு ஒரே ரகளைதான்... அதுலயும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி அல்டிமேட்.. யாருய்யா இவரு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்றைய காலகட்டத்தில், திருமண நிகழ்வு என்பது மிகப் பெரிய ஒரு கொண்டாட்டமாக தான் பார்க்கப்படுகிறது.

கல்யாண Invitation-ஆ? இல்ல Meme-ஆ? வடிவேலு, பார்த்திபன்னனு ஒரே ரகளைதான்... அதுலயும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி அல்டிமேட்.. யாருய்யா இவரு

மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது.

அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான் அனைவரும் நினைப்பார்கள்.

இதற்காக, இன்றைய காலத்தில், திருமணத்திற்கு முன்பே எடுக்கப்படும் போட்டோஷூட் தொடங்கி, திருமண பத்திரிக்கை என அனைத்திலுமே ஏதாவது ஒரு புதுமையை அவர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அடிக்கடி நடைபெறும் வித்தியாசமான திருமண போட்டோசூட் தொடர்பான புகைப்படங்கள் ஏராளம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

அதே போல, வித விதமான திருமண அழைப்பிதழ்கள் வழக்கமான மாடலில் இல்லாமல், புதுமையான டிசைனில் இருப்பதும் பலரையும் வெகுவாக கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்கும். சமீபத்தில் கூட மாத்திரை அட்டையிலும், மருந்து டப்பாவிலும் இருந்த திருமண அழைப்பிதழ்களும் அதிகம் வைரலாகி இருந்தது.

அந்த வகையில், நடிகர் வடிவேலு, இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஆகியோரை வைத்து செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று வேற லெவலில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்த திருமண பத்திரிக்கையின் ஆரம்பத்தில் வடிவேலு, "வாடா ரஞ்சித், இது என்ன கையில" என மாப்பிள்ளையிடம் கேட்கும் வாக்கியம் அமைந்துள்ளது. இதற்கு கல்யாணம் என அவர் பதிலை சொல்ல, பதிலுக்கு கல்யாண தொடர்பான விவரங்களையும் வடிவேலு கேட்கிறார். இதற்கு மாப்பிள்ளை ரஞ்சித்தும் திருமண தேதி, நேரம் குறித்து விவரங்களை குறிப்பிட, அடுத்ததாக என்ட்ரி கொடுக்கிறார் ஆனந்த் சீனிவாசன்.

வாழ்க்கை மற்றும் பண சேமிப்பு குறித்து ஆனந்த் பேசி இருந்த விஷயங்கள், சமீபத்தில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருந்தது. அதனைக் குறிப்பிட்டு, கல்யாணம் செய்வதற்கு சேவிங்ஸ் ரொம்ப முக்கியம் என ஆனந்த் கூற, பதிலுக்கு தன்னுடைய சொந்த பந்தங்கள் மற்றும் நட்புகள் தான் தன்னுடைய சேவிங்ஸ் என்றும் ரஞ்சித் பதில் அளிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது.

தொடர்ந்து, பார்த்திபன், கல்யாணத்தை ஏன் நீங்கள் நான் லீனியரில் நடத்தக் கூடாது என சினிமா ரீதியாக கேட்கும் கேள்வியும் இடம் பெற்றுள்ளது. 90ஸ் கிட்ஸ்களுக்கு கல்யாணம் நடப்பதே பெரிது என பதில் இடம்பெற்றிருக்க, அடுத்ததாக பிரபல யூடியூபர்களான கோபி மற்றும் சுதாகரின் ட்ரெண்டிங் டயலாக் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர், திருமணத்திற்கு அனைவரையும் அழைக்கும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளது. இறுதியில், கூல் சுரேஷின் "வெந்து தணிந்தது காடு" என்ற வசனத்தை தொடர்புபடுத்தி முடிகிறது இந்த திருமண அழைப்பிதழ். முழுக்க முழுக்க ஜாலியாக அச்சிடப்பட்டுள்ள இந்த திருமண பத்திரிக்கை, தற்போது இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

MARRIAGE, WEDDING INVITATION

மற்ற செய்திகள்