உக்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ...! 'பாக்றதுக்கு அட்டைப்பெட்டிக்கு உள்ள ஃபைல்ஸ்...' 'ஆனா உள்ள இருந்தது அது இல்ல...' - சினிமாவை மிஞ்சிய சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமீப காலமாகவே கேரளாவில் தங்கம் கடத்தல் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

உக்கார்ந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ...! 'பாக்றதுக்கு அட்டைப்பெட்டிக்கு உள்ள ஃபைல்ஸ்...' 'ஆனா உள்ள இருந்தது அது இல்ல...' - சினிமாவை மிஞ்சிய சம்பவம்...!

அண்மையில் தங்க கடத்தல் சர்ச்சை தொடர்பாக ஸ்வப்னா உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. அதோடு அல்லாமல் இது கேரள அரசியலிலும் இந்த விவகாரம் சலசலப்பை உருவாக்கியது.

இந்த நிலையில் கோழிக்கோட்டில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சமையலுக்கு பயன்படுத்தும் குக்கரின் அடிபகுதியில் வைத்து தங்கம் கடத்தப்பட்டது. இதே போல் சவுண்ட் ஸ்பீக்கரில் வைத்தும் தங்கம் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

தற்போது கோழிக்கோடு விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு பயணியிடம் இருந்து ரூ.17 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை அட்டைப்பெட்டியில் தங்கத்தை ஃபைல்களுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 350 கிராம் தங்கம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்