"இந்த பாம்பு தான் என்னை கடித்தது!".. நாக பாம்பை உயிரோடு பையில் போட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் தன்னை கடித்த நாக பாம்பை உயிருடன் பிடித்து பையில் போட்டுக்கொண்டு, இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  வந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

"இந்த பாம்பு தான் என்னை கடித்தது!".. நாக பாம்பை உயிரோடு பையில் போட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த இளைஞர்!

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன். பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவர் சௌரிபாளையம் பகுதியில் நண்பர் வீட்டிற்கு வந்த போது அங்குள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்துள்ளது. மது போதையில் இருந்த சௌந்தராஜன் பாம்பை அடிக்க போன போது நாக பாம்பு அவரை கையில் கடித்தது.

இதனையடுத்து அந்த பாம்பை பிடித்த அவர், ஒரு பையில் பாம்பை போட்டுக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.  பாம்பை உயிருடன் பிடித்து வந்ததை பார்த்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பாம்பை அரசு மருத்துவமனையில் பணியில்  இருந்தவர்களிடம் காட்டிவிட்டு மீண்டும் அந்த பாம்பை பையில் போட்டு அரசு மருத்துவமனை பணியில் இருந்த செக்யூரிட்டிகளிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

மற்ற செய்திகள்