Darbar USA

‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோத்தகிரி அருகே நடைபெற்ற இரட்டை கொலை தொடர்பான வழக்கில் 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...

நீலகிரி மாவட்டம் மெட்டுக்கல் ஆதிவாசி கிராமத்தில் கடந்த 11ஆம் தேதி இரவு  தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற ராமசந்திரன் மற்றும் திம்மன் என்னும் 2 இளைஞர்கள் கழுத்தறுத்து கொலை செய்யபட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வந்த போலீசார் அதில் தொடர்புடைய அதே கிராமத்தைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான திம்மன் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருடைய மகளும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த பாபு ஆத்திரத்தில் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து  தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த  திம்மன்  மற்றும் உடன் இருந்த ராமச்சந்திரன் இருவரையும் கொலை செய்துள்ளார். இதையடுத்து, பாபு மற்றும் அவருடைய கூட்டாளிகளான குமார், மூர்த்தி, மகேந்திரன், கிருஷ்ணன், ஜெ.குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின் அவர்களை கோவை சிறையில் அடைத்துள்ளனர்.

CRIME, MURDER, KOTAGIRI, NILGIRIS, LOVE, FATHER